tamilnadu

img

‘இல்லாத காளி நதி’ தான் இந்தியாவுக்கு எல்லையா?

புதுதில்லி:
‘இல்லாத காளி நதி’யை தனது எல்லைக் கோடாக வரையறை செய்துகொண்டு, நேபாள எல் லைக்குள் இந்தியா தனது ராணுவத்தை நிறுத்தியுள்ளதாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக நேபாள நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கும் சர்மா ஒலி, ”நேபாள நாட்டின் பகுதிகளான காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகளில், இந்தியாஆக்கிரமிப்புகள் மேற்கொண்டுள் ளது” என்றும் “அப்பகுதிகளை இந்தியா சொந்தம் கொண்டாடி தனதுநாட்டு வரைபடத்தில் இணைத்துள் ளது” என்றும் கூறியுள்ளார்.மேலும், இல்லாத காளி நதியை நிர்ணயித்து, இந்தியா அதன் படைகளை நிறுத்தியிருக்கும் நேபாளத்தின் எல்லைப்பகுதி மீட்கப்படும்; இந்த விவகாரத்தில், அனைத்துக் கட்சிகளும், நேபாள அரசிற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

“அரசியல் எல்லையை நிர்ணயிக்கும் முன்னர் நேபாளம், பின்விளைவுகளை நினைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்; குறிப்பாக, திபெத்துக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வது நலம்” என்று உத்தரப்பிரதேச முதல் வர் ஆதித்யநாத் கூறியிருந்தார். இதற்கு நேபாள அரசின் கண்டனத்தைத் தெரிவித்துள்ள சர்மா ஒலி,“ஆதித்யநாத் நேபாளம் குறித்துகூறிய கருத்துக்கள் நியாயமானவை அல்ல. ஆதித்யநாத் பொறுப்பேற் காத பிரச்சனைகள் குறித்து அவர் பேச வேண்டாம் என்று இந்திய அரசின் தலைமை, அவரிடம் சொல்ல வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.நேபாள அரசு அண்மையில் வெளியிட்ட புதிய வரைபடத்தில் லிபுலேக், கலபானி மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றை தங்கள் பகுதி என்று கூறியுள்ளது. மேலும் லிபுலேக்வரை போடப்பட்டுள்ள 80 கி.மீசாலையை திறந்ததற்கு இந்தியாவிடம் கடந்த மாதம் எதிர்ப்பும் தெரிவித்தது. அப்போதிருந்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச் சனை நீடித்து வருகிறது.இந்நிலையில் புதிய வரைபடத்திற்கு சட்டப்பூர்வ ஆதரவைபெறுவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தையும் நேபாளம், செவ் வாயன்று தனது நாடாளுமன்றத்தின் கீழவையில் தாக்கல் செய்துள்ளது.

;