tamilnadu

img

இந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல் கைது!

புதுதில்லி:
மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக, இந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல், போஸ்னியா நாட்டில் கைது செய்யப் பட்டுள்ளார். ‘ஆர்சலர் - மிட்டல்’ என்ற உலகின்மிகப்பெரிய இரும்பு எஃகு தொழிற் சாலையை நிறுவியவர் லட்சுமி மிட்டல். சக தொழிலதிபர்களால் ‘இரும்பு மனிதர்’ என்றும் அழைக்கப்படுபவர் ஆவார். அவரின் சகோதரர்தான், தற்போது மாட்டிக் கொண்டுள்ள பிரமோத் மிட்டல்.

பிரமோத் மிட்டல், போஸ்னியாவின் லுகாவாக் நகரில் நிலக்கரி தொடர்பான தொழிற்சாலை ஒன்றில், கடந்த2003-ஆம் ஆண்டில் இருந்து பங்குதாரராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையில், சுமார் ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். 
இந்நிலையில், மோசடி, அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துதல், பொருளாதாரக் குற்றம் போன்ற குற் றச்சாட்டுகளின் கீழ் பிரமோத் மிட்டல் மற்றும் அந்த தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச் சார்யா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள் ளது என, போஸ்னியா நாட்டு அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.பிரமோத் மிட்டல், சுமார் ஐந்து மில்லியன் (2.5 மில்லியன் யூரோ, ஸ்ரீ2.8 மில்லியன்) டாலர் அளவிற்கு மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

;