tamilnadu

img

குடியரசுத் தலைவர் தோட்டத்திலுள்ள துப்புரவுத் தொழிலாளியின் வீடு "சீல்"

புதுதில்லி:
இந்திய குடியரசுத் தலைவர் தோட்டத்திலுள்ள தூய்மைக்காவலரின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளதுகொரோனா தொற்று காரணமாக தூய்மைக் காவலர்  உறவினர் இறந்துள்ளார். அவரது இறப்பிற்கு குடியரசுத் தலைவர் தோட்டத்திலுள்ள வீட்டில் வசிக்கும் தூய்மைக் காவலர் சென்று வந்தார். இதையடுத்து  ஜனாதிபதியின் தோட்டத்தில் வசிக்கும் தூய்மைக் காவலரின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குடியரசுத் தலைவர் தோட்டத்தில் வசிக்கும் 30 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவரின் தோட்டத்திலுள்ள ஒரு அதிகாரியும் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார்.
குடியரசுத்தலைவர் வசிக்கும் கேட் எண் 17-க்கு அருகில் தூய்மைக் காவலரின் வீடு உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி இப்பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;