tamilnadu

img

கர்நாடகாவில் பணி நெருக்கடியால் சுகாதாரத்துறை அதிகாரி தற்கொலை

பெங்களூரு;
கர்நாடகாவில் பணி நெருக்கடியால் சுகாதாரத்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடகாவில் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் தலைமை சுகாதார அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் நாகேந்திரா.  கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வந்துள்ளார். அதனுடன், குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி கொண்டு பணி புரிந்துள்ளார்.  இந்நிலையில், இலக்கை எட்டவில்லை என்று அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டிக்கிறது. இதனால்  அவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், சுகாதார இலக்கை முழுமையாக எட்டவில்லை என நெருக்கடிகொடுத்ததாக அவர் புகார் அளித்துள்ளார்.  இந்நிலையில்  தற்கொலை செய்து கொண்ட சுகாதாரத்துறை அதிகாரியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.  அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப் படும் எனவும் முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

;