tamilnadu

img

கருப்புச் சட்டங்களை திரும்பப் பெறுக!

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டத்திருத்தம், காஷ்மீர் உரிமை பறிப்பு, முத்தலாக் சட்டம் போன்ற மத்திய அரசின் கருப்புச் சட்டங்களை கண்டித்து ஞாயிறன்று (ஆக.25) சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி எம்.பி‌., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் மு. வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் து.ரவிகுமார் எம்.பி., மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

;