tamilnadu

img

தமிழக கோரிக்கைகளுடன் மோடியை சந்தித்த  திமுக எம்.பி.க்கள் 

புதுதில்லி:
தமிழகத்தன் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளுடன பிரதமர் மோடியை திமுக எம்.பி.க்கள் புதனன்று  சந்தித்தனர். திமுக எம்.பி.க்கள்  கனிமொழி, டி.ஆர். பாலு தலைமையில் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் அளித்தனர். அந்த மனுவில்,  நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு வேண்டும். மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில்அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும்.  முல்லைப்பெரியாறு, மேகதாது, தென்பெண்ணை போன்ற நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.  சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்.  எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.  தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என்பது உள்பட 16 கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

;