tamilnadu

img

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்-கிற்கு கொரோனா தொற்று...  

தில்லி 
நாட்டின் நீர்வளத்துறை அமைச்சரான (ஜல் சக்தி) கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் தில்லியில் உள்ள பிரபல மருத்துவமனையான மேதாந்தாவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

செவ்வாயன்று சட்லெஜ் - யமுனா நதிகள் இணைப்பு கூட்டத்தில் அமைச்சர்  கஜேந்திர சிங் பங்கேற்றுள்ளார். இதில் முக்கிய அதிகாரிகள் சிலர் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர்களை தனிப்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் கஜேந்திர சிங் அறிவுறுத்தியுள்ளார்.  

;