tamilnadu

img

கொரோனா மரணங்கள் மறைப்பு... ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள்எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதியஉச்சத்தை தொட்டு வருகிறது. இந்தியாவில்  மகாராஷ்டிரா, தில்லி, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில்  கொரோனா பாதிப்பும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதைத் தவிர்த்து பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,77,618 ஆக உள்ளது.இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரிசோதனையை குறைத்து,கொரோனா பாதிப்பால் எற்படும் மர ணத்தை மத்திய அரசு மறைக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும்இந்த மாயை விரைவில் உடையும், இந்தியாஅதற்கான விலையை கொடுக்கும் என்றும்அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள் ளார்.

;