tamilnadu

img

குடியரசுத் தலைவர் மாளிகையில் இரும்புக் குழாய்கள் திருட்டு!

புதுதில்லி:
குடியரசுத் தலைவர் மாளிகையில், இரும்புக் குழாய்கள் திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தில்லியில், ஜோர் பாக் பகுதியில் இருந்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தண்ணீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான இரும்புக் குழாய்கள்,குடியரசுத் தலைவர் மாளிகையின் 23 மற்றும் 24-ஆம் நுழைவு வாயில் அருகே அடுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளன.இந்நிலையில், அவற்றில் 22 இரும்புக் குழாய்கள் வரைதிடீரென காணாமல் போகவே, ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் இதுதொடர்பாக சாணக்கியபுரி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.அவர்கள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வுசெய்து, மர்ம நபர்கள் சிலர் அப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த இருந்ததையும், அவர்கள் சென்ற பின்னரேஅங்கு குடிநீர் குழாய்கள் மாயமாகி இருப்பதையும் கண்டறிந்தனர்.மேலும், மர்ம நபர்கள் வந்தகாரின் எண்ணை வைத்து, அதன்உரிமையாளர் அஜய் என்பவரைப்பிடித்து விசாரித்த போலீசார், பீகாரை சேர்ந்த மிதிலேஷ், ‘ஊபர்’ கார் ஓட்டுநர் ராகேஷ் திவாரி, குட்டுகான் ஆகியோரையும் அடுத்தடுத்து கைது செய்து, அவர்களிடமிருந்து குழாய்களை மீட்டுள்ளனர்.இந்நிலையில், உச்சபட்ச பாதுகாப்பில் இருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே இரும்பு குழாய்கள் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;