tamilnadu

img

புதுச்சேரியில் மேலும்16 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி

புதுச்சேரியில் மேலும் 16 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் இன்று புதிதாக 16 பேருக்கு கோவிட்-19 தொற்று இறுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களில், 9 பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர். இதில் 3 பேர் மேட்டுப்பாளையம் முககவசம் தயாரிக்கும் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தவர்கள். மேலும், காரைக்காலில் 8 மாத கர்ப்பிணி பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார். மற்ற 7 பேருக்கு எப்படி தொற்று பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் புதுச்சேரியில் மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 131 பேர், ஜிப்மரில் 23 பேர், காரைக்காலில் 7 பேர், மாஹே பிராந்தியத்தில் ஒருவர் என மொத்தம் 162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 118 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

;