tamilnadu

img

கொரோனா தொற்றால் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் விமான வருவாய் 86 சதவிகிதம் வீழ்ச்சி

கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் - ஜூன் மாதங்களில் விமான வருவாய் 86 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியுள்ளார் .

2020 - 21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய விமான நிறுவனங்களின் வருவாய் 85.7 சதவிகிதம், அதாவது 3,651 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு காரணம் கொரோனா தொற்றுதான் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புதனன்று தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 31 முதல் ஜூலை 31 வர விமான பணியாளர்களின் குறைந்துள்ளது. இது 7.07 சதவிகிதமாகும். விமானங்களை இயக்குபவர்களின் வருவாய் 2019 ஏப்ரல்-ஜூன் மாதங்களில், 75,745 கோடியில் இருந்து 2020 ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 4,894 கோடியாக குறைந்துள்ளது. 
கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25 முதல் மே 24 வரை இந்தியாவில் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அவை மே 25 முதல் மீண்டும் தொடங்கப்பட்டன, ஆனால் குறைக்கப்பட்டன.

ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் விமான நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கை 22.44 சதவிகிதம் குறைந்து 29,254 ஆக இருந்தது. ஏர் இந்தியாவின் மொத்த வருவாய் 2019 ஏப்ரல்-ஜூன் மாதங்களில், 7,066 கோடியிலிருந்து 2020-21 முதல் காலாண்டில் 1,531 கோடியாகக் குறைந்துள்ளது. மார்ச்-ஜூலை காலகட்டத்தில் நாட்டின் உள்நாட்டு விமான போக்குவரத்து 1.2 கோடியாக குறைந்துள்ளது. மார்ச் முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் சர்வதேச போக்குவரத்து 11.55 லட்சமாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் 93.45 லட்சமாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்கள் இந்தியாவில் வந்தே பாரத் மிஷனின் கீழ் மற்றும் ஜூலை முதல் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட இருதரப்பு விமான சேவை ஏற்பாடுகளில் இயங்கி வருகிறது.

;