tamilnadu

மாணவர்களுக்கு  இணையதளம் துவக்கம்

புதுச்சேரி,மார்ச்.9- தனியார் வங்கி நிறு வனத்தின் உதவியோடு புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில்  பள்ளி மாணவர்க ளின் சுகாதார பதிவு இணையதள தொடக்க விழா துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. முதலமைச்சர்  ரங்கசாமி  முன்னிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இணைய சேவையைத் தொடங்கி வைத்தார். கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த இனணய சேவை மூலம் ஒவ்வொரு மாணவர்களின் ஊட்டச் சத்துக் குறைபாடு தொடக்க நிலையிலேயே கண்டறியப் பட்டு, அவற்றை சரி செய்ய சுகாதாரப் பதிவு உதவியாக இருக்கும். பெரும்பாலான நோய்களுக்கு காரணம் தொடக்க நிலையிலேயே ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்யப் படாததுதான்.எனவே இந்த சுகாதார பதிவு குறை பாட்டை கண்டறிய உதவும்.

;