tamilnadu

img

பெருந்தொற்று காலத்தில் நிகழும் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துக... அரசுக்கு ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்....

புதுக்கோட்டை:
சைல்டு ரைட்ஸ் அண்ட் யூ ஆய்வின்படிகொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக் குழுக்கூட்டம்  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர்கள் உ.வாசுகி, சுதா சுந்தர்ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி , பொருளாளர் எஸ்.மல்லிகா ஆகியோர் பங்கேற்றனர். சைல்டு ரைட்ஸ் அண்ட் யூ ஆய்வின்படி கொரோனா காலத்தில் தொடர்ந்து குழந்தைத்திருமணம் அதிகரித்து வருகிறது. எனவே, குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சைல்டு லைன் திட்டத்தை மாற்றி அமைக்கும் ஒன்றிய அரசின் முடிவு, இதனால் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு அதிக தீங்குவிளைவிக்கும். எனவே, மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாடுகளுக்குள் சைல்ட் லைனை ஒன்றிய அரசு தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசுப் பள்ளி குழந்தைகளின் உணவு பாதுகாப்பு மற்றும் கல்வித் தரத்தை உறுதிப்படுத்தஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஆண்ட்ராய்டு போன் வழங்க வேண்டும். ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையை நீக்குவதோடு, அனைத்து அத்தியா வசியப் பொருட்களும் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளில் 1500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இதனை மறுபரிசீலனை செய்து அருகில் உள்ள பள்ளிகளைத் திறந்து ஏழை, எளிய, கிராமப்புற குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்பொழுது உசிலம்பட்டியில் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளியை உடனடியாகத் திறக்க வேண்டும். அடிபட்டு இறந்துபோன சசிரேகாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையும் வழங்க வேண்டும். அடிபட்டுசிகிச்சையில் உள்ள நான்கு குழந்தை களுக்கும் உயர்சிகிச்சை அளிக்கவேண்டும்.

சத்துணவுப் பொருட்களை மாண வர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

;