tamilnadu

img

வெளிநாடுகளில்  தவிக்கும் தமிழர்களை  மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்

  அறந்தாங்கி, ஜூன் 15- கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உள்ள நிலை யில், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வர முடியாமல்  வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை உட னடியாக மீட்க கோரியும், அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுக்கோட்டை  மாவட்டம் அறந்தாங்கி, ரெத்தினக்கோட்டை, ராஜேந்திரபுரம் உள்ளிட்ட 23 கிளைகளில் திங்கள் காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகளும் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி தங்களது வீடுகளின் முன்பும், மொட்டை மாடிகளிலும் தனிமனித இடைவெளியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

;