tamilnadu

கேரள விமான விபத்தில் நீலகிரியைச் சேர்ந்த மூவர் படுகாயம்

உதகை, ஆக. 9 - கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் வெள் ளியன்று நடந்த விமான விபத்தில் நீலகிரி மாவட்டத் தைச் சேர்ந்த மூவர் படுகா யம் அடைந்தனர். கடந்த 7 ஆம் தேதி வெள் ளியன்று துபாயில் இருந்து கேரளாவிற்கு பயணிகள் விமானம் ஒன்று வந்தபோது எதிர்பாராதவிதமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக் குள்ளானது. இதில் விமானி கள் உள்ளிட்ட 19 பேர் உயிரி ழந்தனர்.

மேலும், படுகாயம் அடைந்த 122 பேர்களில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பாடந்துறை பகுதியைச் சேர்ந்த பைசல் பாபு அவரது மனைவி ஷனிஜா மற்றும் கூடலூர் நந்தட்டி பகுதி யைச் சேர்ந்த ஷாஹாலா ஷாஜகான் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் கேரளா பெருந் தல்மன்னா மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

;