tamilnadu

img

பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தரமற்ற வீடுகள்- பொதுமக்கள் புகார்

 உதகை, ஜூலை 9-  பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள்  தரமற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி யுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் ஓவேலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாரதி நகர் என்ற இடத்தில் கடந்த ஜனவரி மாதம்  பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா  திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் கனமழையால்  வீட்டின்  மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரீட் கூரையில் மழைநீர்  தேங்கி வீட்டின் உள்ளே வடிகி றது. மேலும், எப்போது இடிந்து விழும் எனத் தெரியாமல் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும், இந்த வீடுகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு நடத்தி தரமாக வீடு கட்டாத ஒப் பந்ததாரர் மீது தக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதிப்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;