tamilnadu

img

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடுக - கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்

உதகை, ஜூலை 22- பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிடக் கோரி நீலகிரியில் கிராம சுகாதார செவி லியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவலைத் தடுக்க உயிரை துச்சமென நினைத்து களப்பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். கொரோனா நோய்த்தொற்று ஏற் பட்டோருக்கு உயரிய பாதுகாப்புடன் சிகிச்சை வழங்கிட வேண்டும்.

நோய்த் தொற் றால் பாதிக்கப்பட்ட கிராம சுகாதார செவி லியர்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி நிவா ரணம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீல கிரி மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் செவ்வாய்கிழமை முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணி புரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

;