tamilnadu

img

“நீங்கள் எங்களை வஞ்சித்து விட்டீர்கள்”

ஐ.நா.சபை : நீங்கள் எங்களை வஞ்சித்து விட்டீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என சரமாரியாக கேள்வி கேட்டார். 

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் இயக்கத்தின் பிரதிநிதி.கிரேட்டா தன்பெர்க். சுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே காலநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ‘பள்ளிகள் புறக்கணிப்பு’ எனும் கோஷத்துடன் போராடி வருகிறார்.இவருடைய செயலால் ஈர்க்கப் பட்டு உலகம் முழுவதும் மாணவர்கள் போராட தொடங்கிவிட்டனர். திசையெங்கிலும் பரவிய இந்த பள்ளிகள் புறக்கணிப்பு போராட் டம் அண்மையில் சென்னையில்கூட நடந்தது.

விமானத்தில் பறப்பதையே அறம் சார்ந்த விஷயமாக மாற்றிய தில் கிரேட்டாவுக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. அதாவது விமா னங்கள் அதிகளவில் பசுமைக்குடில் வாயுவை வெளிப்படுத்துகிறது. அதனால் தேவையற்ற விமான பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று ‘பறத்தல் அவமானம்’ என இவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவர் ஆற்றிய உரை, “இவை அனைத்தும் தவறு.நான் இங்கே இருந்திருக்கக் கூடாது.இந்த பெருங்கடலின் மறுமுனையில் இருக்கும் பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும்.ஆனாலும் நீங்கள் அனை வரும் நம்பிக்கையோடு எங்களிடம் வருகிறீர்கள்.உங்களுக்கு எவ்வளவு தைரியம்? உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள்.ஆனாலும், நான் பாக்கிய சாலிகளில் ஒருத்திதான்.மக்கள் துன்பப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள்.மொத்த சூழலியலும் உருக்குலைந்துவிட்டது.அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்.ஆனால், பணம் குறித்து... நித்திய மான பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனை கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களுக்கு எவ்வளவு தைரியம்?நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள்உங்களது துரோகத்தை இளைஞர் கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.எதிர்கால தலைமுறையி னரின் விழிகள் உங்கள் மீதுதான் உள்ளன.எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால்,நான் இப்போது சொல்கிறேன், “நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்.

;