tamilnadu

img

தாய்லாந்து மன்னரின் 4 வது மனைவியின் அரசி அந்தஸ்து பறிப்பு

தாய்லாந்து மன்னருக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவரது 4 வது மனைவியின் அரசி அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது. 
தாய்லாந்தின் மன்னராக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ் காலமானதையடுத்து அவரது மகன் மகா வஜ்ரலங்கோன்குக்கு  கடந்த மே மாதம் புதிய மன்னராக முடிசூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து வஜ்ரலங்கோன் முடிசூட்டப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தனது பாதுகாப்பு அதிகாரியான 40 வயது நிரம்பிய சுதீடாவை அரச முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சுதீடா தாய்லாந்தின் அரசியானார். இந்நிலையில் சுதீடா பேராசையுடன் செயல் பட்டார். மன்னருக்கு எதிராக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு அவரின் அரசி அந்தஸ்தை வஜ்ரலங்கோன் திரும்ப பெற்றுக்கொண்டுள்ளார். 
 

;