tamilnadu

img

ஒரே நாளில் 23 ஆயிரம் பேருக்கு கொரோனா... அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சமானது.... 

நியூயார்க் 
உலகை தனது உள்ளங்களில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயல்பு நிலைமையை கடுமையாக பாதித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஒரு படி மேலே சென்று அந்த நாட்டை சின்னாபின்னமாக்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 23 ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 10 லட்சத்து 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 1,384 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 56 ஆயிரத்து 797 ஆக உயர்ந்துள்ளது. ஆச்சரியம் அளிக்கும் விதமாக அமெரிக்காவில் கடந்த ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரமாக உள்ளது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வதால் அமெரிக்க வாசிகள் பதற்றத்தில் உள்ளனர்.        
 

;