tamilnadu

போக்குவரத்து நெரிசலை குறைக்க தேனியில் ரூ.100 கோடியில் மேம்பாலம்

தேனி:
போக்குவரத்து நெரிசலை குறைக்க தேனியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைப்பதற்கான ஆய்வுப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது . நேரு சிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு பகுதியை மையமாக வைத்து பெரியகுளம் சாலை, குமுளி சாலை, மதுரை சாலை ஆகியவற்றில்மேம்பாலம் அமையவுள்ளது . தேனியில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தேனியில்மதுரை, குமுளி, திண்டுக்கல் சாலைகளை இணைக்கும் நேருசிலை மும்முனை சாலை சந்திப்பை மையமாக வைத்து, பெரியகுளம் சாலையில் 800 மீட்டர், குமுளி, மதுரை சாலைகளில் தலா 400 மீட்டர் என மொத்தம் 1,600 மீட்டர் நீளம், 10.9 மீட்டர் அகலத்திற்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. புதிய மேம்பாலம் பணிகளை தொடங்குவது, மின் மாற்றிகள்,  மின் கம்பங்களை மாற்றியமைப்பது,புதிய மின் விளக்குககள் அமைப்பது ஆகியவை குறித்து மதுரை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ப.செந்தில்,  தேனி கோட்டப் பொறியாளர் முருகேசன்,உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன், உதவிப் பொறியாளர் ராஜசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

;