tamilnadu

மாணவர் கொலை வழக்கு:  மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி, ஜூன் 7- தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் சத்திய மூர்த்தி(22). கல்லூரி மாணவரான இவர், கடந்த மாதம் 29 ஆம் தேதி மாலையில் நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்க ளால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஆறுமுகனேரி போலீசார் வழக்குப் பதிந்து, இவ்வ ழக்கில் தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிசங்கர், போலீசார் சுடலைமணி ஆகி யோர் பனிக்கர்குளம் பிரதான சாலையில் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டு இருந்தபோது அப்பகுதியில் சந்தேகத்துக்கு ரிய இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசா ரித்தனர்.விசாரணையில் அவர் ஆத்தூர், தலைவன்வடலி வடக்குத் தெருவைச் சேர்ந்த கொடியன் மகன் வேல்முரு கன்(36) என்பது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணை யில் இவர் கல்லூரி மாணவரான சத்தியமூர்த்தி கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஆறுமுகனேரி காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

;