tamilnadu

img

திருவில்லிபுத்தூர் ஆனந்தா வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தின விழா 

திருவில்லிபுத்தூர் ஆனந்தா வித்யாலயாபள்ளியில் ஜே.சி.ஐ ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜாகோபுரம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. அரசு பள்ளி, அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிறப்பாக பணியாற்றியவருக்கும், சமூகநலத் தொண்டு புரிந்த ஆசிரியர்களுக்கும் விருதுகளையும் சான்றிதழ்களையும் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கணேசன், நிலவள வங்கி தலைவர் முத்தையா மற்றும் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

;