tamilnadu

திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 மையங்களில் பரிசோதனை

திருவண்ணாமலை, ஜுன் 25- திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க  மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. தற்போது, வெளிநாடு,  வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களி லிருந்து வருகை தருபவர்களுக்கு முன்னு ரிமை அடிப்படையில் கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதிகளவில் பரிசோதனைகள் மேற்  கொள்வதன் மூலமே தொற்று பாதிக்கப்பட்ட வர்களை கண்டறிந்து தனிமைபடுத்தும் போதுதான் தொற்று மேலும் அதிகளவில் பரவாமல் தடுக்க இயலும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவ மனை, ஆரணி, செங்கம், போளுர், தானிப்பாடி, வந்தவாசி, கலசப்பாக்கம், சேத்பட்டு, தண்டராம்பட்டு, வெம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவ மனைகள், காட்டாம்பூண்டி,  வாணாபுரம், மேல்பள்ளிப்பட்டு, காரப்பட்டு, ஜமுனா மரத்தூர், கொம்மனந்தல், களம்பூர், கடலாடி,  மங்கலம், கீழ்பென்னாத்தூர், ச.வி.நகரம், தச்சூர், நாவல்பாக்கம், பெருங்கட்டுர், ஆக்கூர், வழூர், தெள்ளார், கொழப்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் என 29 மையங்களில் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை  கெரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. எனவே சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் தங்க ளுக்கு அருகாமையில் உள்ள பரிசோதனை  மையத்தில் பரிசோதனை செய்துகொள்ளு மாறு  ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி கேட்டுக்  கொண்டார்.

;