tamilnadu

img

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் படுகொலை: மார்க்சிஸ்ட் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி/ நாகர்கோவில், ஜூன் 27- சாத்தான்குளத்தில் காவல்து றையினர் தாக்கியதில் தந்தை -  மகன் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை  கண்டித்து தமிழகம் முழுவதும் சனி க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
திருநெல்வேலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்து துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு மாவட்டச் செயலாளர் கே. ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.கரு மலையான், மாவட்ட செயற்குழு உறு ப்பினர்கள் ஆர்.மோகன், நெல்லை தாலுகா செயலாளர் எம்.சுடலைராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ராஜகுரு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.வரகுணன், எஸ்.பெருமாள், எம்.பீர்முகமதுஷா, ஆர். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
தென்காசி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல் ஆம்பூரில் வி.தொ.ச சார்பில்  மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள், வியாபாரிகள் அஞ்சலி
ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் உடல் வியாழன்று உடற்கூராய்வு செய்யப்பட்டு சாத்தான்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது நாசரேத் சந்தி பஜாரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்-வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நாகர்கோவில்
நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா  சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு, வட்டார செயலாளர் கே. மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், வட்டாரகுழு உறுப்பினர் நாக ராஜன், மாவட்டகுழு உறுப்பினர் எஸ்.அந்தோணி ஆகியோர் பேசி னர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தங்கமோகன், வட்டார குழு உறுப்பினர்கள் பி.ராஜ நாயகம், மனோகர ஜஸ்டஸ், அஸீஸ் ஆகியோர் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.
துவரங்காடு
துவரங்காடு சந்திப்பில் வட்டாரச்  செயலாளர் மிக்கேல் தலைமை வகி த்தார். இதில், வட்டார குழு உறுப்பி னர்கள் எஸ்.மணி, பேதுரு, ஐயப்பன், மனோகரன், சுவிசேசமுத்து உட்பட  பலர் கலந்து கொண்டனர். ஈத்தா மொழி சந்திப்பில் வட்டார குழு உறுப்பினர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். வட்டார செயலாளர் எஸ்.டி.ராஜ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

;