tamilnadu

img

நெல்லையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

 திருநெல்வேலி,ஆக 19- மத்திய அரசு கனிம வளம் மிக்க சுரங்கம், வங்கி, ரயில்வே, எல்ஐசி உள்ளிட்ட நவரத்தின  பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும்,மாநில அரசு மோட்டார் வாகன சட்டத்தை தனியா ருக்கு ஆதரவாக திருத்தம் செய்வதை கண்டித்தும் நெல்லை வண்ணார் பேட்டையில் செவ்வாய்க்கிழமை அன்று  அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாநில அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன், சிஐடியு மாநில செயலாளர் செண்பகம், ஏஐடியூசி உலகநாதன்,எச்.எம்.எஸ்  மாநில துணை தலைவர் சுப்பிர மணியன், டிடிஎஸ் செயலாளர் சந்தானம், ஐஎன்டியூசி ராமசாமி, கஸ்பர் ராஜ் உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;