tamilnadu

நெல்லையில் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருநெல்வேலி, ஜூலை 13- நெல்லை மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,811-ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஞாயிறு வரை 1,758 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 836 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திங்களன்று மாவட்டத்தில் புதிதாக 53 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,811 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கோவிட்-19 சிறப்பு மருத்துவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோனை முடிவில் நெகட்டிவ் என்று வந்த 44 பேர் வீட்டிற்கு  அனுப்பி வைக்கப்பட்டனர்.

;