tamilnadu

img

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர் ஆக.9- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் வியாழக்கிழமை தலைமை ஆசிரியர் சி.கஜானா தேவி தலைமையில் நடைபெற்றது. உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.கார்த்திகேயன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் பால் ஏ.பக்கர், பொருளாளர் எஸ்.எம்.நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான மா.கோவிந்தராசு பேசினார். முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், நாடியம் கூட்டுறவு வங்கித் தலைவர் சிவ.மதிவாணன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அம்மணிசத்திரம் பாலு, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் பழனிவேலு, கோ.ப.ரவி மற்றும்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக 10, 11, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற உதவிய ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோருக்கு சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். 

;