tamilnadu

img

கொரோனா ஊரடங்கால் - தெருக்கூத்து,நாட்டுப்புற கலைஞர்கள் பட்டினிக்கிடக்கும் அவலநிலை

 தருமபுரி ஏப்-21, கொரோனா அச்சம் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் தெருக்கூத்து வாய்ப்பிழந்த கலைஞர்கள் வருவாய் இன்றி பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  பாரம்மரிய கலையான தெருக்கூத்து தமிழகத்திலேயே தருமபுரி மாவட்டம் முதன்மை வகிக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய கலைகளான தெருக்கூத்து ,கோள்ஆட்டம்,சிலம்பாட்டம்,பம்பை,பறை,தப்பாட்டம் கரகாட்டம் மற்றும் தெருக்கூத்துக்கூத்துக்கு தேவையான ஆடை அணிகலன் தயாரிப்பு பணியாளர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். இதில் ஒருசிலர் சிறுகுறு விவசாயிகள் உள்ளனர். பெரும்பகுதி கலைஞர்கள் தெருக்கூத்து உள்ளிட்ட கிராமிய கலையை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.  குறிப்பாக தெருக்கூத்து கலைஞர்கள் ஒரு வருடத்தில் மார்ச் மாதம் முதல் ஜீன் மாதம் வரை தெருக்கூத்து நடக்கும்  குறிப்பாக கோடை காலத்தில் 15 நாட்கள் தொடர்ந்து நடக்கும் மகாபாரதம் கோயில் திருவிழாக்கள், தனிகுடும்ப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி கிராமங்களில் இடிவிழுந்தால் தெருக்கூத்து நிகழ்ச்சி என வழக்கமாக நடந்துவருகிறது.  

வழக்கமாக ஒரு வருடத்தில் மார்ச் மாதம் முதல் ஜீன் மாதம் வரை தெருக்கூத்து நடக்கும். வருடம் முழுவதும் இந்த நான்கு மாதத்தில் நடக்கும் நிகழ்ச்சிதான் வருட ஒட்டுமொத்த வருவாயில் 80 சதவிகிதமாகும், பாரம்பரிய கலையையே இவர்கள் தொழிலாக , வாழ்வாதாரமாக கருதி வாழ்ந்துவரும் இக்கலைஞர்களுக்கு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் இந்த வருட ஒட்டுமொத்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.  தருமபுரி மாவட்டத்தில் 5 ஆயிரம் தெருக்கூத்து மற்றும் நாட்டுபுறக்கலைஞர்இருக்கும் சூழ்நிலையில் கலைஞர்களில் கலைபாண்பாட்டுத்துறை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் மாவட்டத்தில் 1700 கலைஞர்கள் மட்டுமே   பதிவாகியுள்ளனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால் மற்ற கலைஞர்கள் பதிவுசெய்யவில்லை தற்போது கொரோனா தடுப்பு நிவாரமாக அரசு ரூ 1000, அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினால் குறைந்த அளவு கலைஞர்கள் மட்டுமே பயன்பெற வாய்ப்புள்ளது. மீதமுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து மற்றும் நட்டுபுறக்கலைஞர்களை பாதுகாக்கவும் ,இவர்கள் பயன்பெறும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்மூலம் கணக்கெடுப்பு நடத்தி விடுபட்ட இவர்களுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என கலைஞர்கள் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகின்றனர்.  இதுகுறித்து தமிழ்நாடு தெருக்கூத்து மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் சின்னசாமி தெரிவித்ததாவது:  அண்மையில் கொரானா பாதிப்பினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்கள் கூடும் கோவில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.   இந்நிலையில் கோவில் திருவிழாக்கள் மகாபாரத திருவிழா போன்ற விழாக்களை நம்பி தெருக்கூத்து நடத்திவந்த தெருக்கூத்து கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் மாதக்கணக்கில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தெருக்கூத்து கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆகிய கரகாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் , பம்பை, தோல் பறை உள்ளிட்ட கிராமிய கலைஞர்கள் பொதுமக்கள் கூடும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டதால் வேலை இழந்து வருவாய் இன்றி வாடும் நிலையில் உள்ளனர்.   பல்வேறு தொழிலாளர் நல வாரியங்கள் மூலமாக பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் கொரோனா அச்சம் நீங்கி இயல்பு நிலை திரும்பும் வரை நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களை பாதுகாத்திட நாட்டுப்புற கலைஞர்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ 15 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.  தருமபுரி மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். அன்றாடம் தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடித்து அதன்மூலம் வருவாய் ஈட்டி பிழைப்பு நடத்திவரும் கலைஞர்களை சார்ந்து அந்த குடும்பம் உள்ளது. எனவே நாட்டுப்புற கலைஞர்களின் குடும்பத்தை பாதுகாத்திட தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

;