tamilnadu

img

மூன்று மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை 

சென்னை
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பொழிகிறது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான  முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குமரிக் கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

;