tamilnadu

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தட்டிக் கேட்ட முதியவர் கொலை 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு  

தஞ்சாவூர், மார்ச் 3- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே கரிசவயல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 32 வயதான பெண் திரு மணம் ஆனவர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அய்யாத்துரை என் பவர் கடந்த மூன்று மாதங்களாக அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.  இதுகுறித்து அப்பெண் தனது மாமனார் கணேசன்(60), மாமியார் பவளக்கொடி (55) ஆகியோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள், அய்யாதுரையிடம் தட்டிக் கேட்டுள் ளனர். இதில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த அய்யாத்துரை, அவரது நண்பர்கள் செருபாலக்காடு வீரமணி, படுவான்கொல்லை பெரியசாமி ஆகியோர் அவர்களை  தரக்குறைவாக திட்டி கணேசன், பவளக்கொடி, உறவினர் சத்யா ஆகிய 3 பேரை அரிவாளால் வெட்டினர்.  இதில் காயமடைந்த சத்யா, பவளக்கொடி ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். கணேசன், தஞ்சை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அய்யாத்துரை, வீரமணி, பெரியசாமி ஆகியோரை தேடி வருகின்றனர்.

;