tamilnadu

img

தோழர் குருதாஸ் தாஸ் குப்தா மறைவு தஞ்சையில் அமைதி ஊர்வலம்

தஞ்சாவூர், நவ.2-  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியுசி மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னருமான குருதாஸ் தாஸ் குப்தா மறைவையொட்டி, தஞ்சாவூரில் பல்வேறு கட்சிகள், தொழிற் சங்க அமைப்புகள் சார்பில் அமைதி ஊர்வலம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தஞ்சாவூர் ரயிலடியில் தொடங்கிய இந்த ஊர்வலம் ஆற்றுப்பாலம், காந்திஜி சாலை வழியாக ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் முடிவடைந்தது. பின்னர், அங்கு புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லர் மு.அ. பாரதி தலைமை வகித்தார். இதில், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட் டோர் பேசினர். திருவையாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் துரை. சந்திர சேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ.நீல மேகம், திராவிடர் கழகப் பொதுச் செயலர் இரா.ஜெயக்குமார், மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் லஷ்மி நாராயணன், மதிமுக மாவட்டச் செயலர் கோ. உதயகுமார், ஏஐடியுசி மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலர் சி. ஜெயபால், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலை வர் ச. சிமியோன் சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் ஜெய்னு லாப்தீன், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு. பழனிராசன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலர் நா. வைகறை, சிஎம்எல் லிபரேஷன் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பி னர் கே. ராஜன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்டப் பொதுச் செயலர் க. அன்பழகன், கும்பகோணம் அரசுப் போக்கு வரத்துக் கழக ஏஐடியுசி கௌரவத் தலைவர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

;