tamilnadu

img

தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை: கணித ஆசிரியர் கைது  

தஞ்சையில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பருத்தியப்பர் பகுதியில் கருணாநிதி என்பவரின் 17 வயது மகள் ஒரத்தநாடு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஒரத்தநாடு போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில், மாணவி படிக்கும் அதே பள்ளியில் பணியாற்றி வந்த கணித ஆசிரியர் சசிகுமார் என்பவர், சக மாணவர்கள் முன் தகாத வார்த்தைகளால் கூறி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளானதால் தற்கொலை செய்து கொள்வதாக தன்னுடன் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

அதனைதொடர்ந்து கணித ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;