tamilnadu

தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம்

 தஞ்சாவூர், மே 16- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெருமகளூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்ட 91 பேருக்கு, அரிசி, மளிகை உள்ளிட்ட ரூ 1 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் அறிவுறுத்தலின்படி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தனது சொந்தப் பணத்தில் இருந்து இவற்றை வழங்கினார்.  பேரூராட்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேதுபாவாசத்திரம் அதிமுக ஒன்றியச் செயலாளர் நாடியம் சிவ.மதிவாணன், முன்னாள் கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலர் ப.ரவிசங்கர், முன்னாள் பேரூராட்சி தலைவர் பி.ராமமூர்த்தி, அதிமுக மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன், மாணவரணிச் செயலாளர் கோவி.இளங்கோ, இரா. சங்கர், சுரேஷ், டி.கே.சுப்ரமணியன், எம்.எஸ்.நீலகண்டன் கலந்து கொண்டனர். 

;