districts

img

தூய்மைப் பணியாளர்களுக்கு நர்சரி அமைத்து கொடுத்த ஆட்சியர்

தஞ்சாவூர், ஜன.14-  தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி பஞ்சாயத்தில், பகுதி நேரமாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் 12 பேரை மகளிர் சுய உதவிக் குழுக்களாக ஒன்றிணைந்து, ‘தஞ்சை தாரகைகள் பசுமையகம்’ திட்டத்தின் கீழ், ஆட்சியர் அலுவலகத்தில் நர்சரி ஒன்று ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரால் உருவாக்கப்பட்டுள்ளது. நர்சரியில், பூந்தோட்ட நாற்றங்காலை பராமரித்து, பூச்செடிகளை விற்பனை செய்யும் வகையில், மருங்குளம் அரசு தோட்டக்கலைத்துறைப் பண்ணையில், தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.   இதன்படி, நர்சரியை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து, விற்பனையை துவங்கி வைத்தார். கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, மகளிர் திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, வேளாண் துணை இயக்குநர் ஈஸ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;