tamilnadu

தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண உதவி

கும்பகோணம், மே 6-  தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சங்கம் பேரியக்கத்தின் சார்பில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பேரூ ராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும்  தூய்மை பணியாளர்கள் 42 குடும்பத்தாருக்கு  முதல் கட்டமாக ரூ. 30,000 மதிப்பிலான அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நிவார ணப் பொருட்கள் அடங்கிய பைகள், வட்டாரத்  தலைவர் ம.கோவிந்தராஜன் தலைமையில் வழங்கப்பட்டது. திருவிடைமருதூர் பேரூராட்சி அலுவல கத்தில் பணிபுரியும் செயல் அலுவலர், செயற்பொறியாளர் உள்ளிட்ட 17 பணியா ளர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் மா.கலைசெல்வன், மாவட்ட துணை செயலா ளர் தியாக.சரவணன் உள்ளிட்டோர்  நிவா ரணப் பொருட்களை வழங்கினர்.

;