tamilnadu

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கும்பகோணம், மே 9-  கும்பகோணம் நகர் பகுதியில் தூய்மைப்  பணியாளர்கள், நகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கொரோனா பணிகள் கண்காணிப்பு அலுவலர் சண்முகம் தலைமை வகித்தார். ஆட்சி யர் கோவிந்தராவ் முன்னிலை வகித்தார். கும்பகோணம் நகராட்சி ஆணையர் லட்சுமி, நகர் நல அலுவலர் பிரேமா ஆகி யோர் உரை ஆற்றினர்.  முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உரு வாக்கும் பழங்கள் மற்றும் சத்துப் பொருட்கள் வழங்கப்பட்டன. 850 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவ கழகத் தலைவர் பரமசிவம், செயலா ளர் முத்தையா செல்வகுமார். முன்னாள் மாநிலத் தலைவர் கனகசபாபதி உள்பட இந்திய மருத்துவ கழகம் சார்பாக 30 பொது மருத்துவர்கள் மற்றும் கும்பகோ ணம் பரஸ்பர சகாய நிதி வங்கி தலைவர் ராம.ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;