tamilnadu

img

இளம்பிள்ளையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- மக்கள் பீதி

இளம்பிள்ளை, ஜூலை 5- இளம்பிள்ளை அருகே உள்ள ஏகாபுரம் கிராமத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 16 ஆக அதிகரித்துள்ளது அப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள ஏகாபு ரம் ஊராட்சிக்குட்பட்ட களியகவுண்டனூர் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டது. இதையடுத்து களிய கவுண்டனூர் பகுதியில் 2 ஆம் தேதி சனிக்கிழமை வரை மூன்று கட்டமாக 250-க்கு மேற்பட்ட நபர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே 12 நபர்கள் வரை பாதிக்கப்பட்ட நிலை யில் மேலும் 4 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

;