tamilnadu

img

எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க மத்திய அரசு மனுத்தாக்கல்

சேலம், ஜூன் 5 - எட்டு வழிச்சாலை திட் டம் தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததை கண்டித்து சேலத்தில் விவசா யிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். முன்னதாக சேலம்- சென்னை இடையே 278 கிலோமீட்டர் தொலை விற்கு எட்டு வழி பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே இத்திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டியது. இதனால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங் களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதால், நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து 5 மாவட்ட விவ சாயிகளும் போராட்டத்தில் இறங்கி னர். மேலும் இத்திட்டத்திற்கு எதிராகவும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பல் வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இத் திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகை யில் இருப்பதால் திட்டத்தை ரத்து செய் வதோடு, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண் டும் என கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர்.  இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலை யில், மத்திய மாநில அரசுகள் உயர் நீதி மன்றத் தீர்ப்புக்கு தடை கோரி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந் தனர். இந்த மேல்முறையீடு வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நிலுவையில் இருந்த நிலையில் மத்திய அரசு சார்பில் நேற்று திடீரென உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டம் முடங்கி கிடப்ப பதாக தெரிவித்து மேல்முறையீடு செய்துள் ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் இத்திட் டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பூலாவரி, கொள்ளம்பட்டி ஆகிய இடங் களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதில் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் எட்டு வழிச்சாலை திட் டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டுமெனவும் இந்த வழக்கை விரைந்து முடிக்க மேல்முறையீடு செய்த மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங் களை எழுப்பினர்.

;