சென்னை, ஏப்.23- “அரசியல் கட்சித் தலைவர் கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்து வது தவிர்க்கப்பட வேண்டும்” என்று பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பொதுக்கூட்ட பேச்சு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளி யிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:
“பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ் வாராவில் நடைபெற்ற தேர் தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்குவங்கி அர சியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச் சைக்குரிய கருத்தை வெளிப் படுத்துவது இந்திய இறை யாண்மைக்கு உகந்ததல்ல.
இஸ்லாமிய மக்களு டைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துகளை தெரி விப்பது ஏற்புடையதல்ல. அர சியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நல னுக்கும், மத நல்லிணக்கத்திற் கும் நல்லது.
அரசியல் கட்சித் தலைவர் களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகள் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர் தல் பிரச்சாரத்திற்காக கண்ணி யம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசி னாலும் அது, இந்திய இறை யாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கண்டனம் தெரிவிக்க பயப்படும் எடப்பாடி!
பழனிசாமி வெளியிட்டி ருக்கும் அறிக்கையால், பிரத மர் மோடிக்கு வலித்து விட்டால் என்னாவது? என்ற எச்ச ரிக்கையுடன் ‘கண்டனம்’ என்ற வார்த்தையே இல்லா மல் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு வெறு மனே எதிர்ப்பு என்ற வகையி லேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.