tamilnadu

img

திருச்சிற்றம்பலம் சாலையில் குவிந்து கிடக்கும் மணல் விபத்து ஏற்படும் அபாயம்

தஞ்சாவூர், மே 5- திருச்சிற்றம்பலம் பகுதியில் சாலையில் குவிந்து கிடக்கும் மணலால் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், அதனை அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், திருச் சிற்றம்பலம் பகுதி முக்கியமான போக்குவரத்து நிறைந்த பகுதி யாகும். பட்டுக்கோட்டை -  புதுக்கோட்டை, பட்டுக் கோட்டை - அறந்தாங்கி வழித்தடத் தில் அமைந்துள்ள இப்பகுதிக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடை வீதிக்கு பொருட்கள் வாங்க, மருத் துவமனை, வெளியூர் செல்ல, பள்ளி, கல்லூரி செல்ல என பல்வேறு காரணங்களுக்காக இருசக்கர வாகனத்தில் வந்து செல்கின்றனர். இந்த வழியாக ஆயிரக்கணக்கான கனரக வாக னங்கள் தினசரி வந்து செல் கின்றன. இந்நிலையில் நகரின் பல்வேறு  பகுதிகளில் தார்ச்சாலையை யொட்டி மணல் குவிந்து கிடக் கிறது. குறிப்பாக துறவிக்காடு சாலை, ஆவணம் சாலை, நாடங் காடு சாலை என அனைத்து சாலைகளிலும் இவ்வாறு மணல் சேர்ந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல் வோர் கனரக வாகனங்கள் வரும்போது, ஒதுங்குவதற்காக வும், தாங்கள் செல்லும் பகு திக்கு திரும்பும் போதும் மணல்  சறுக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.  எனவே, ஏதேனும் அசம்பா விதம் நிகழும் முன்பாக சாலை யில் குவிந்து, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள மணலை  அகற்ற சம்பந்தப்பட்ட துறையி னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;