tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : விசாரணை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையைத் தேசிய மனித உரிமை ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்து, ஒரு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டது. இந்த புலனாய்வு அமைப்பு விசாரணை செய்த அறிக்கையைத் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்
தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை முடித்து வைப்பதாக, கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தது. 

இதனை எதிர்த்து சமூக செயற்பாட்டாளரான ஹென்றி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு  தொடர்ந்திருந்தார். அதில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை செய்து வருகிறது. தமிழகக் காவல்துறை விசாரணை செய்து வருகின்ற நிலையில், இந்த வழக்கைத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அவசர கதியில் முடித்து வைத்திருப்பதாகவும், அந்த புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கையை ஏற்றுக் கொள்ளக்கூடாது எனவும் வழக்குத் தொடுத்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஒரு சீலிடப்பட்ட கவரில், நீதிமன்றம் மட்டும் பார்க்கும் வண்ணம் ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதே சமயம் தமிழக அரசு தரப்பில் பொதுத்துறை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது முதல் யார் யாரிடமெல்லாம் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை மேற்கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் முதல் காவல்துறையினர் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்கள் என்று தெரிவித்திருந்தது.   

இதனையடுத்து, பதில் மனுத் தாக்கல் செய்யத் தேசிய மனித உரிமை ஆணையம் அவகாசம் கேட்ட நிலையில்,  மூன்று வாரக்காலம் அவகாசம் கொடுத்து
விசாரணையை செப்டம்பர் 13 ஆம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர். 

;