tamilnadu

img

கல்லறையில் மயங்கி கிடந்தவரை தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்த காவல் ஆய்வாளர்  

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையொன்றின் மீது மயங்கி விழுந்திருந்த நபரை, காவல் ஆய்வாளர் தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தெருவோரங்களில் வசிப்போருக்கு இந்த மழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிடைக்கும் இடங்களில் படுத்துறங்கி தங்களின் வாழ்வை நகர்த்துகின்றனர் அந்த மக்கள். அந்தவகையில் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வரும் உதயா என்பவர் கனமழை காரணமாக கல்லறைக்குள்ளேயே தங்கியுள்ளார்.  கனமழை தொடர்ந்த காரணத்தால் உதயா உடல் நிலை பாதிக்கப்பட்டு அங்கேயே மயக்கமாகி இருக்கிறார். இதைக் அங்கு கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, முறிந்து விழுந்த மரங்களை அகற்றி உதயாவை தனது தோளில் வைத்து ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்து விட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

;