tamilnadu

தமிழகத்தில் 43 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

சென்னை, மே 20-மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 43 இடங்களில் வருகிற 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் கடந்த மாதம் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்து உள்ளது. தமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்களவைத் தொகுதிகளுக் கும் கடந்த 18 ஆம் தேதி தேர்தல் நடை பெற்றது. 18 தொகுதிகளுக் கான சட்டமன்ற இடைத்தேர்தலும் அதே நாளில் நடத்தப்பட்டது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர் தல் மே 19 அன்று நடந்தது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் 43 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண் ணிக்கை நடை பெறுகிறது.சென்னை மாநகரில் மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வட சென்னையில் பதிவான ஓட்டுகள் ராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை ஓட்டுகள் கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்திலும் எண்ணப்படுகின்றன.தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. ஒரு லட்சம் காவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்கிறார்கள். பதற்றமான ஓட்டு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவப் படையினர், மாநில காவலர்கள், சிறப்பு படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த 18 ஆம் தேதி வாக்குப் பதிவு முடிவடைந்த நாளிலிருந்தே 24 மணி நேரமும் வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. சுழற்சி முறையில் காவல்துறையினரும், துணை ராணுவ படையின ரும் வாக்கு எண்ணும் மையங்களில் நிறுத் தப்பட்டுள்ளனர்.வாக்கு எண்ணிக்கை அன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. அது முடிவடைந்ததும் மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கும். இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேசைகள் வரை போடப் படுகிறது. ஒரு கண்காணிப் பாளர், உதவியாளர், நுண் பார் வையாளர் ஆகியோரது மேற்பார் வையில் வாக்குகள் எண்ணப்படுகிறது.ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் வேட்பாளர்களின் முகவர்கள் பணியில் இருப்பார் கள். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மின்னணு எந்திரங்களை அவர் களிடம் காட்டிய பின்னரே ஓட்டு எண்ணும் பணியை தொடங்குவார்கள். அடுத்த 30 நிமிடங்களிலேயே முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் “விவிபேட்” என்கிற ஒப்புகைச் சீட்டு எந்திரமும் பொருத்தப்பட்டிருந்தது. இந்த எந்திரத்தில் பதிவான வாக்குகளையும், மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளையும் 100 விழுக்காடு சரி பார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும். இதனால் இறுதி முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும் 23 ஆம் தேதி இரவுக்குள் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் தெரிய வந்து விடும் என்றே தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;