சென்னை, ஏப்.23- “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சா ரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி மீது சட்ட ரீதியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலி யுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.
நமது அரசமைப்புச் சட் டத்தில் உறுதிப்படுத்தப் பட்டுள்ள “ஒற்றுமை; மதச் சார்பின்மை” ஆகிய கோட் பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதி யான வன்முறையைத் தூண் டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவா கத் தெரிகிறது.
பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு மக்கள் பிரதிநிதித்து வச் சட்டத்தின் பிரிவு 123(3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறை கள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக் கைக்கும் எதிரானதாகும்.
இந்திய தண்டனைச் சட் டத்தின் பிரிவுகள் 153ஏ, 154பி, 298,504, 505 ஆகிய வற்றின்படி இது தண்டிக்கப் பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மை யாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் மோடி மீது வழக் குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்து கிறோம்.”
இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.