tamilnadu

img

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 22  வரை அவகாசம்...

சென்னை
கொரோனா ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்தத் தமிழ்நாடு மின்சார வாரியம் மே 6-ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. 

இந்நிலையில், கொரோனா பரவல் மேலும் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு மூன்றாம் கட்ட ஊரடங்கு விதித்துள்ளது. இந்த ஊரடங்கு மே 17-ஆம் தேதி  நிறைவு பெறும் நிலையில், தாழ் வழுத்த மின் கட்டணம் செலுத்த மே 22-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாகத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் மார்ச் 25 முதல் உள்ள தொகையைத் தாமத கட்டணம் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் எனவும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

;