tamilnadu

சொத்து, குடும்பப் பிரச்சனை புகார்களை சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு அனுப்புக! தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் அறிவுறுத்தல்

சென்னை,மே 19-சொத்து, குடும்பப் பிரச்சனை தொடர்பான புகார்களை சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு-புதுச்சேரிபார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. சொத்து, குடும்பப் பிரச்சனைமற்றும் பணம் விவகாரம் தொடர்பாகக் காவல் நிலையங்களுக்குப்புகார் வந்தால் முதல் தகவல் அறிக்கைபதிவு செய்வதற்கு முன்பு மாவட்டச் சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு அனுப்பி தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் சிறப்புக்குழு உறுப்பினர் சிங்காரவேலன், வழக் கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த சில மாதங்களுக்கு முன்புகே.கே.நகர் காவல் நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர் களுக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே ஒரு வழக்கு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை யடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் கே.கே.நகர் காவல் ஆய்வாளர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.இதனை விசாரித்த பார் கவுன்சில்,வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை எச்சரித்தது. காவல்நிலையங்களில் வழக்கறிஞர் களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வழக்கில் தொடர்பில்லாதோர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்வதைத் தடுக்கும் வகையிலும் சொத்து, பணம் விவகாரம் மற்றும் குடும்பத் தகராறு தொடர்பான புகார்கள் காவல்நிலையத்துக்கு வந்தால் எப்ஐஆர் பதிவு செய்வதற்குமுன்பு மாவட்டச் சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.இரு தரப்பையும் அழைத்துப் பேசினால் சமரசம் ஏற்படக் கூடும். அதன் அடிப்படையில் எப்ஐஆர் போடுவதைத் தவிர்க்க முடியும் என்று தெரிவித்தனர்.

;