சென்னை, ஏப்.23- பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பேசிய வெறுப்புப் பேச்சு நாடு முழுவதும் கடும் கண்டனங்க ளுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில், மோடியின் வெறுப்புப் பேச்சுக்காக அவரை திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜூம் கடுமையாக விளாசியுள்ளார்.
இதுதொடர்பாக அளித் துள்ள பேட்டியில் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது: “மல்லிப்பூவில் இருந்து எப் படி அதன் மணம் வெளியே வருமோ அதே போல் தான் மன்ன ரின் (மோடி) வாயிலிருந்து அவ ரின் பேச்சிலிருந்து அவரது அசிங் கம் வெளியே வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு பிர தமராக இருந்தவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய பேச்சை திரித்து அதை முஸ்லிம்கள் என பேசும் போதே மோடியின் அஜெண்டா நமக்கு தெரிகிறது.
இதே வார்த்தையை மோடி தமிழ்நாட்டில் இருக்கும் போது பேச மாட்டார். கர்நாடகாவில் பேச மாட்டார். அந்த பருப்பு இங்கே வேகாது. ஆனால் உத்த ரப்பிரதேசம் போன்ற வடமாநி லங்களில் அது வேகும். ஒரு நாளைக்கு 5 வேடம் போடுகிற மாதிரி... ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தர்மம் என்று பேசுகிற மன்னருக்கு 2 நாக்கு கள் உள்ளது. ஒவ்வொரு நாக்கும் ஒவ்வொன்று பேசிக் கொண்டு இருக்கிறது. இவை எல்லாம் நாம் தலைகுனிய வேண்டிய அசிங்கமான விஷயம். இதற்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
மோடி பேச்சு குறித்து தேர் தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க வேண்டுமா? திருடனை பற்றிய புகாரை இன்னொரு திரு டனுக்கு நீங்கள் கொடுப்பீர்களா? ராமரின் படத்தை வைத்து அர சியல் செய்கிறார்கள், சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றால் அவர்கள் (தேர்தல் ஆணையம்) வாங்கப்பட்டுள் ளார்கள். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் சொல்வது தான் நடக்கும். எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது, யாரும் கேள்வி கேட்கக்கூடாது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தர்மம், தேர்தலே கிடையாது.” இவ்வாறு பிரகாஷ் ராஜ் குறிப் பிட்டுள்ளார்.