tamilnadu

மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர் அருகே கொரோனா பாதித்த பகுதியில் திறந்த மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு


திருவள்ளூர்,மே 26- பல்வேறு இடங்களில் இருந்து மதுப்பிரியர்களால் அப்பகுதிக்கு வந்து செல்வ தால் கொரோனா தொற்று  மேலும் ஏற்படும் என்பதால்  இந்த 2 மதுக்கடைகளையும் மூட அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று  பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத் தில் உள்ள 132 டாஸ்மாக் கடைகளில் 83 மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.  சென்னை போலீஸ்  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கடை திறக்  கப்படாததால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. இந்தநிலையில் கொரோனா தொற்று பரவிய  காக்களூர் பகுதியில் கடந்த  இருதினங்களுக்கு முன்பு 2  மதுக்கடைகள் திறக்கப் பட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பகுதியில் ஞாயி றன்று  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 வயது முதி யவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த பகுதியில் மட்டும் மேலும் 4 பேர் கொரோ னாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் இருந்து குடிகாரர்களால் அப்பகுதிக்கு வந்து செல்வ தால் கொரோனா தொற்று  மேலும் ஏற்படும் என்பதால்  இந்த 2 மதுக்கடைகளையும் மூட அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று  பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்  தில் இதுவரை 764 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் திருவள்ளூர்,  ஆவடி, பூந்தமல்லி, வில்லி வாக்கம், கடம்பத்தூர், சோழ வரம்  பகுதிகளைச் சேர்ந்த  37 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது.

;