tamilnadu

img

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை...

சென்னை:
காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் குளறுபடியில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

கொரோனா  பரவல் அச்சுறுத்தல் மற்றும் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து  எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இதில் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் தனியார் பள்ளிகள் குளறுபடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. 

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் குளறுபடியில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தோ்வு மதிப்பெண் எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தார்.

;